உணவகத்தில் மா்ம நபா் பணத்தை கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்!!

உணவகத்தில் மா்ம நபா் பணத்தை கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உணவகத்தில் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற  மா்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னப்பநாயக்கான்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன், இவர் இலுப்பூரில் கடந்த 5 வருடத்திற்கு மேலாக உணவகம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில்,  நாகராஜன் வியபாரத்தை முடித்து விட்டு,  வழக்கம் போல், கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் சென்று பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னா் உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற காவல்துறையினா், அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் வைத்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.