சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவிலர்...நைசாக வந்து சைசாக திருடி சென்ற பெண்கள்...

வாகனத்தில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை பெண்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள்...

சாலையில் வரிசையாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவிலர்...நைசாக வந்து சைசாக திருடி சென்ற பெண்கள்...

கோவையில் வாகனத்தில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை பெண்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காந்திபுரம் 7 வது வீதியில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் திருடி செல்லும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

வாகனத்தில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை காணாததால் அதன் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் தனது ஹெல்மெட்டை திருடிசென்றதைக் கண்டு  அதிர்ச்சியடைந்தார்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து ஹெல்மெட் உரிமையாளர் இன்னும் காட்டுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை பல்வேறு பகுதிகளில் ஆண்கள் மட்டுமே ஹெல்மெட் திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், பெண்கள் ஹெல்மெட்  திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது