செம்மரக் கட்டைகள் கடத்தல்.. சேசிங் சென்று மடக்கி பிடித்த போலீஸ்!!

திருப்பதியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்மரக் கட்டைகள் கடத்தல்.. சேசிங் சென்று மடக்கி பிடித்த போலீஸ்!!

சித்தூர் பகுதியில் பல கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து திருப்பதி - சித்தூர் நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து வேலூரை நோக்கி அதிவேகமாக மினி லாரி, 3 கார்கள் ஒன்று சென்று கொண்டிருந்தன.

ஆனால், வாகனங்கள் நிற்காமல் சென்றதை அடுத்து போலீசார் சற்று தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது 4 கோடி ரூபாய் மதிப்பிலான 100 செம்மரக் கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்திலிருந்த சிலர் தப்பியோடி விட்ட நிலையில், இருவர் மாட்டிக் கொண்டனர். இதனைதொடர்ந்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.