கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் வழிப்பறி: சிறார்கள் கைது

பல்லடம் அருகே பனியன் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த இரண்டு சிறார்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தியை காட்டி மிரட்டி செல்போன்,  பணம் வழிப்பறி: சிறார்கள் கைது

பல்லடம் அருகே பனியன் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்கள் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த இரண்டு சிறார்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் சந்தேகப்படும் வகையில் மூன்று நபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த மூவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 16-ம் தேதி பனியன் தொழிலாளி வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி,  விலையுயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சரத்குமார், பத்ரன் ஆகிய 2 சிறுவர்கள், தாராபுரம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மற்றொருவர் திருப்பூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.