வைரலாகும் பைக் திருடும் சி.சி.டி.வி. காட்சி...

வைரலாகும் பைக் திருடும் சி.சி.டி.வி. காட்சி...

செங்கல்பட்டு | மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றி நிறைய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் மறைமலைநகர் வட்டார பகுதிகளில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகின்றனர்.

பெரும்பாலும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருவதால் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை குறிவைத்து மர்மநபர்கள் இருசக்கர வாகனங்களை திருடி வருகின்றனர்இப்பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறுகிறது.

மறைமலைநகர் சுந்தரர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அழகேசன் (32) குடிதண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வசிக்கும் சுந்தரர் தெருவில் உள்ள 8 வீடிகளை சேர்ந்தவர்களும் வீட்டின் வெளியில் சாலையிலேயே இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | கல்லூரி மாணவர்கள் பேருந்தில் மோதல்... புகார் அளித்த மாணவன்!!

நேற்று நள்ளிரவு நேரத்தில் மர்மநபர் ஒருவர் அழகேசனது இருசக்கர வாகனத்தை மிக சாதாரணமாக அவரது சொந்த வாகனத்தை எடுத்து செல்வது போல திருடி செல்லும் காட்சி சிசிடிவி காட்சியில் பதிவாகி அந்த காட்சிகள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து அழகேசன் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில்  மறைமலைநகர் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பைக் திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறம்போது இப்பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவதே கிடையாது என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்க | சுடுகாட்டை சமூக விரோதிகள் பயன்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை - மேயர் பிரியா உத்தரவு