பேருந்தில் சிக்கி, தலை நசுங்கி... உயிரிழந்த பதற வைக்கும் சம்பவம்...

சென்னையில் மாநகர பேருந்து மோதிய விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் சிக்கி, தலை நசுங்கி... உயிரிழந்த பதற வைக்கும் சம்பவம்...

சென்னை : விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த புகழ் (35) கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், நேற்றிரவு கோயம்பேட்டில் இருந்து அசோக் பில்லர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார்.

அவ்வழியாக வந்த மாநகரப் பேருந்து, வடபழனி மெட்ரோ பாலம் அருகே வரும்போது புகழ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் உரசியதால் நிலை தடுமாறி பேருந்தின் நடுவே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | இறந்த மனைவி, இயேசு போல உயிர்த்தெழுவார் என நம்பிய கணவர்...

இத்னைத் தொடர்ந்து, பேருந்தின் வலப்பக்க பின்புறச் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இருசக்கர வாகனம் ஓட்டி வந்த புகழ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | டெலிவரி ஊழியரை சிதைத்த லாரி டிரைவர் தப்ப முயற்சி...

விசாரணையில், மாநகர பேருந்து ஓட்டுனர் சக்திமான் (57) மற்றும் நடத்துனர் கல்விநாதன் (51) ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | மதுரை பட்டாசு ஆலையில் பெரும் விபத்து...விபத்திற்கான காரணம் என்ன?!