உள்ளாடைக்குள் பதுக்கி வைத்த தங்கம் பறிமுதல்... வாலிபர் கைது...

துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ. 47 லட்சத்தி 41 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 83 கிராம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளாடைக்குள் பதுக்கி வைத்த தங்கம் பறிமுதல்... வாலிபர் கைது...

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த சென்னை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

மேலும் படிக்க | நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம்... முதலமைச்சர் உத்தரவு..

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்த போது ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிக்ரெட்டுகள் கைப்பற்றினர்.  பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் உள்ளாடை மற்றும் ஆசனவாய் பகுதிக்குள் தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். 

இவரிடம் இருந்து ரூ. 47 லட்சத்தி 41 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ  83 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | 120 சவரன் கொள்ளை... முதலாளிக்கு வேட்டு வைத்த வேலைக்காரர்கள்...