82 லட்சத்திற்கு தங்கம் பறிமுதல்... இரண்டு வாலிபர்கள் கைது...

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ. 82 லட்சத்தி 41 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 850 கிராம் தங்கம் பறிமுதல் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

82 லட்சத்திற்கு தங்கம் பறிமுதல்... இரண்டு வாலிபர்கள் கைது...

சென்னை : விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். 

அப்போது துபாயில் இருந்து வரும் விமானத்தில்  பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

மேலும் படிக்க | எக்ஸ்கலேட்டரில் நசுங்கிய சிறுவனின் விரல்கள்... விமான நிலையத்தில் பரபரப்பு...

அப்போது உள்ளடைக்குள் தங்கம் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 47 லட்சத்தி 15 ஆயிரம்  மதிப்புள்ள 1 கிலோ 36 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் படிக்க | உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்திய சூடான் நாட்டு இளைஞர்...! 1 கிலோ 850 கிராம் தங்கம்...!

அதுப்போல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த மதுரை வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது தங்க செயின்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 36 லட்சத்தி 26 ஆயிரம் மதிப்புள்ள 814 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 

ஒரே நாளில் 2 பேரிடம் இருந்து ரூ.82 லட்சத்தி 41 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 850 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.