விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்...தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்...தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனைய கழிவறையில் ரூ. 50 லட்சம் மதிப்புடைய 1 கிலோ தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் இருந்து உள்ளே செல்லும் வழியில் உள்ள கழிவறையில் துப்புரவு  ஊழியர்கள் சுத்தம் செய்த போது, அங்கு ஒரு மர்ம பார்சல் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை போலீசார் வெடிகுண்டா இருக்குமோ என மோப்ப நாயுடன் சோதனை செய்தனர். பின்னர் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. 

இதையும் படிக்க : பணி நிரந்தரம் வேண்டி... தலைமைச் செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!

இதையடுத்து அந்த மர்ம பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் இருந்ததை கண்ட போலீசார், உடனே சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த மர்மநபர்கள், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்ததை கண்டதும் கழிவறையில் போட்டு சென்று இருக்கலாம் என்றும், இதை கடத்தி வந்தது யார்? கழிவறையில் வைத்து சென்றது யார்? இதற்கு ஊழியர்கள் யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியிருக்கும் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.