4 மனைவிகள், 5 குழந்தைகள் இருக்கும் போதே 5-வது திருமணத்திற்கு முயன்ற தலைமைக் காவலர்...
ஆந்திராவில் 4 மனைவிகள், 5 குழந்தைகள் இருப்பதை மறைத்து, 5ஆவது திருமணம் செய்ய முயற்சித்த தலைமைக் காவலர் மீது நான்காவது மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் 4 மனைவிகள், 5 குழந்தைகள் இருப்பதை மறைத்து, 5ஆவது திருமணம் செய்ய முயற்சித்த தலைமைக் காவலர் மீது நான்காவது மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் குற்ற தடுப்பு காவல் நிலையத்தில், அப்பலராஜூ என்பவர் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
அவருக்கும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மா என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அப்பலராஜூ ஏற்கனவே மூன்று திருமணம் முடித்துள்ளதும், 5 குழந்தைகள் இருந்த நிலையில், தன்னை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டதையும் தெரிந்து கொண்ட பத்மா, அப்பலராஜூடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்ய அப்பலராஜூ தயாராகியுள்ளார். இதனையடுத்து அப்பலராஜூ மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள பத்மா, அப்பலராஜூ தன்னை 4 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.