பிறந்து நான்கு நாட்களே பச்சிளம் குழந்தை கடத்தல்- கதறும் பெற்றோர்..

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து நான்கு நாட்களே பச்சிளம் குழந்தை கடத்தல்- கதறும் பெற்றோர்..

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர்கள் குணசேகரன் ராஜலட்சுமி தம்பதியினர். இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் உறவினர்கள் ஆதரவின்றி  தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று தஞ்சை அரசு மருத்துவமனையில்  ராஜலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது உதவிக்கு யாரும் இல்லாமல் கணவன் மனைவி இருவர் மட்டுமே இருந்ததைப் பார்த்த பெண் ஒருவர் உதவி செய்வதுபோல் கடந்த 3 நாட்களாக ராஜலட்சுமியுடன் இருந்துள்ளார்.

ராஜலட்சுமியை இன்று  காலை கழிவறைக்கு சென்றிருந்த நிலையில், தனக்கு மயக்கம் வருவதாக கூறி குணசேகரன் வெந்நீர் வாங்க அனுப்பிய அந்த பெண்மணி, பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே படுக்கையில் குழந்தை இல்லாததை கண்டு  அதிர்ச்சியடைந்த  தம்பதியினர் கதறி அழுத சம்பவம் காண்பொரை கலங்க வைத்தது.

இது தொடர்பான புகார்  குறித்து  வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உதவி செய்வதுபோல் நடித்து குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம்  தஞ்சை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.