சாக்லேட் என கருதி எலி பேஸ்ட் சாப்பிட்ட குழந்தை பலி...
புதுச்சேரியில் சாக்லேட் என நினைத்து எலி பேஸ்டை சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி | புதுசாரம் வெங்கடேஸ்வரா நகர், இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மேரி ரோஸ்லின் (27). இவரது கணவர் தினேஷ்குமார் ஒருவருடத்திற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது தந்தை உடன் வசித்து வரும் மேரி ரோஸ்லின் 45 அடி சாலையில் உள்ள தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்து வருகின்றார்.
இவரது 3 வயதுமகள் தியா கடந்த 11 ம் தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு கிடந்த எலி பேஸ்ட் கேக்கை சாக்லெட் என எடுத்து சாப்பிட்டுள்ளது. இதனை பார்த்த குழந்தையின் தாத்தா அக்குழந்தையை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக அனுமதித்தார்.
மேலும் படிக்க | கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி... போலீஸ் விசாரணை...
அப்போது மருத்துவர்கள் மேல் கிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல கூறியதை அடுத்து தியாவை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக புதுச்சேரி தன்வந்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூன்று வயது குழந்தை எலி கேக்கை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | அண்ணன், தங்கை தூக்கிவீசப்பட்டு பலியான சிசிடிவி காட்சி...