மின்சார ரயிலில் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை...
சென்னையில் மின்சார ரயிலில் தனியாக இருந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், வேளச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி தாயார் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு...!
உடனே ரயில்வே பாதுகாப்பு படையினர் சத்யராஜை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சத்யராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு பெண்ணாக இருந்தால் மட்டும் போதும், அந்த பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும் பரவாயில்லை என தனது இச்சைகளுக்காக இது போன்ற வன்மைகள் செய்யும் சத்யராஜ் போன்ற கொடுமையாளர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை எல்லாம் பத்தாது என பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணையில் மாட்டிய முக்கிய ஆவணங்கள்...!