இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்!

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்!

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட  தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து தனுஷ்கோடி கடல் பகுதியில் தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு படகை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் படகை சோதனை செய்யும் பொழுது படகில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட  தங்க கட்டிகள் இருந்துள்ளது.  

அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை கடத்தி வந்தவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிடிப்பட்ட தங்கத்தின் சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:இத்தாலியில் கண்டறியப்பட்ட தமிழ் ஓலைச்சுவடிகள்!