இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!!!
திண்டிவனத்தில் கடை மற்றும் வீட்டின் மேல் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை, அடித்து, பொதுமக்கள் பிடித்து போலீசிடும் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்லூரி சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் ராஜ்குமார்(40). இவரது வீடு ரோசனைபாட்டை, அம்பேத்கர் சிலை அருகே அமைந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகனான 26 வயதான பிரவினுக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு ராஜாவின் மகன் பிரவீன், மது பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி ராஜ்குமாரின் கடை மற்றும் வீட்டின் மேல் வீசியுள்ளார். திடீரென குண்டு வீசியதால், வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளியே வந்து பார்த்தால், பெட்ரோல் குண்டு சிதறிக்கடந்ததைப் பார்த்து பயந்துள்ளனர்.
சத்தம் கேட்டு, உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிரவீனை, தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் ஏ எஸ் பி அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். உடனே காயமடைந்த பிரவினை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்த நிலையில், இன்று காலை அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார்கள். முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவரால் வீடு மற்றும் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.