கஞ்சா பரிமாறிக் கொள்வதில் தகராறு.. இளைஞர் அடித்துக் கொலை!!

நெல்லையில் கஞ்சா பரிமாறிக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா பரிமாறிக் கொள்வதில் தகராறு.. இளைஞர் அடித்துக் கொலை!!

பணகுடி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பசுபதி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிலருக்கும் கஞ்சா பரிமாறிக் கொள்வதில் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் மது அருந்தியதாகவும், அப்போது மீண்டும் கஞ்சா பரிமாறிக் கொள்வதில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சிலர் பசுபதியை அடித்து கொலை செய்து அதே பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் கணேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.