வரதட்சணை கொடுமை: திருமணமான ஒரே ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்    

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை: திருமணமான ஒரே ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்      

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பிரசாத்- இலக்கியா தம்பதியினர். கடந்த 2020 மே மாதம் இருவருக்கும்  திருமணமானது.  திருமணத்திற்கு வரதட்சணையாக 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி, சொகுசு கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் பணம் கேட்டு இலக்கியாவுடன் ராம்பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் கொடுமைப்படுத்தியாக இலக்கியா அடிக்கடி பெற்றோரிடம் கூறி உள்ளார்.

இந்நிலையில் நேற்று இலக்கியா தற்கொலை செய்து கொண்டதாக ராம்பிரசாத் இலக்கியாவின் வீட்டார்க்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இலக்கியா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இலக்கியாவின் தந்தை அண்ணாதுரை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமாகி ஒரே ஆண்டில் வரதட்சணை கொடுமை விவகாரத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தினால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.