1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்... 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது சென்னை போலீஸ்...

சென்னை வேளச்சேரியில் சுமார் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்து போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்... 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது சென்னை போலீஸ்...
சென்னை வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகளில் விலையுர்ந்த போதை பொருள் விற்கப்படுவதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அடையாறு போலீஸ் துணை ஆணையர் விக்ரமன் தலைமையில் வேளச்சேரி ஆய்வாளர் ஜெரி உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைத்து ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது வேளச்சேரி பேபி நகர் பகுதியில் நேற்றிரவு வேளச்சேரி போலீசார் வாகனத் தணிக்கை செய்தனர். 
 
அப்போது ஒரு காரை மடக்கி சோதனை செய்ததில் காரை ஓட்டி வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்சல் (22) என்பவரை  சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டதால் அவரை நிறுத்தி முன்னுக்கு பின் முரணாக பேசிய அவரின் உடமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த நபர் 1 கிராம் மெத்தபெட்டமைன் என்ற விலையுர்ந்த போதைப் பொருள் வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
 
அப்சலை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில்  போதைப் பொருள் கடத்தி விற்கும் கும்பல் திருவல்லிகேணியைச் சேர்ந்த அப்துல் கலிக் (48), சேட்டு முகமது (47), பஷீர் அகமது (47) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சுமார் 1 கோடி  மதிப்பிலான 1,401 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள், 2 கார், 2 இருசக்கர வாகனம் மற்றும் 7 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களிடம் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் தீவிர  விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் 4 பேரும் மருத்துவப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இவர்களை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.