மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட போதை பொருட்கள் : ஒருவர் கைது - தப்பியோடியவருக்கு வலை !

சத்தியமங்கலம் அருகே இரண்டு வேன்களில் கடத்திவரப்பட்ட 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது. ஒருவர் தப்பியோட்டம்.

மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட போதை பொருட்கள் : ஒருவர் கைது - தப்பியோடியவருக்கு வலை !

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி காவல்துறை சோதனை சாவடி உள்ளது. இன்று அதிகாலை சத்தியமங்கலம் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், இரண்டு பிக்கப் வேண்களை சோதனை செய்த போது, ஒரு வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை அப்படியே விட்டு விட்டு  தப்பி ஓடினார். சத்தியமங்கலம் காவல்துறை ஆய்வாளர் நெப்போலியன் தலைமையில் சோதனை செய்த போலீசார் வாகனங்களை சோதனை செய்த போது 65 மூட்டைகளிலும் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

பிடிபட்ட மற்றொரு வாகனத்தின் ஓட்டுநரை காவல்துறையினர் விசாரித்த போது  கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த செம்புலிங்கம் என்பதும் மைசூரில் 2 பிக்கப் வேன்களில் 65  மூட்டைகளில் போதைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவை செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து  வேன் ஓட்டுனர் செம்புலிங்கத்தை கைது செய்த சத்தியமங்கலம் போலீசார், ஹான்ஸ், பான்பராக், மாணிக்சந்த், சுவாகத் போன்ற போதைப்பொருள்கள் கொண்ட 65 மூட்டைகளை கைப்பற்றி சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். செம்புலிங்கம் மற்றும் தப்பி ஓடி சென்ற குமாரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து செம்புலிங்கத்தை கைது செய்தனர். போதைப்பொருட்களின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.