முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை...போலீசார் விசாரணை

சென்னை அடுத்த பெரம்பூரில் பிளாட்பாரத்தில் தங்கிருந்த முதியவர் தலையில் கல்லைபோட்டு கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை...போலீசார் விசாரணை

மாதவரம் அருகே உள்ள சென்னை மாநகராட்சி கட்டண கழிப்பிடம் பக்கத்தில் இருந்த பிளார்பாரத்தில் முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். அதில் இறந்து கிடந்தவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக மாநகராட்சி கட்டண கழிப்பிடம் அருகே வசித்து வந்த மூர்த்தி என்பதும் இவர் ஆதரவற்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பார்த்த போலீசார், அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ஹேமந்த் என்பதும், அவர் கடந்த சில மாத காலமாக முதியவருடன் தங்கி இருந்ததும், இவர் தான் முதியவர் தலையில் கல்லை போட்டு கொன்றதும் தெரியவந்தது.’

அதனைதொடர்ந்து குற்றவாளியான ஹேமந்தை கைது செய்த போலீசார், முதியவரை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.