லியோ படத்திற்கு போலி டிக்கெட்; திரையரங்கம் எச்சரிக்கை!

லியோ படத்திற்கு போலி டிக்கெட்; திரையரங்கம் எச்சரிக்கை!

லியோ திரைப்படத்திற்கு மதுரையில் சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் டிக்கெட் போலியானது.  

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 18ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக கூறி மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா திரையரங்கம் பெயரில் போலியான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.

இந்நிலையில் இது தொடர்பாக சினிப்பிரியா திரையரங்க நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், லியோ திரைப்படம்  18ஆம் தேதி மாலை சிறப்பு காட்சி என்று வெளியாகி உள்ள டிக்கெட் போலியானவை எனவும், இதனை யாரும் வாங்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டை யாரேனும் வாங்கினால் இதற்கு திரையரங்க நிர்வாகம் பொறுப்பல்ல எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இப்புகாரில் சமூகவலைதளங்கள் மூலமாக டிக்கெட் விற்பனை செய்யப்படக்கூடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: ஐந்து மாநில தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கும் தனித் தொகுதிகள்!!