கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த கள்ளக்காதலன்!!கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்...

காட்டுமன்னார்கோயில் அருகே மாமங்கலம் கிராமத்தில் கள்ளக்காதலி கழுத்தை அறுத்த வாலிபரை கிராம மக்கள் மரத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த கள்ளக்காதலன்!!கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்...

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி செல்வி என்பவருக்கும், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேவ புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர்க்கும் கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இவர்களுக்குள் சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.  இந்த கருத்து வேறுபாடுகளுக்கு இடையே மாமங்கலம் கிராமத்திற்கு சென்ற திருநாவுக்கரசு செல்வியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் வாக்குவாதம் முற்றவே திருநாவுக்கரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வியின் கழுத்தை அறுத்துள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த செல்வியை கிராம மக்கள் உடனடியாக மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய திருநாவுக்கரசை கிராம மக்கள் மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். 

இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திருநாவுக்கரசை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.