ஆலோசனை மையத்துக்கு அனுப்பப்பட்ட பெண் தற்கொலை - போலீசார் விசாரணை  

ராமநாதபுரம் அருகே காவல்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள ஆலோசனை மையத்திற்கு அனுப்பப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலோசனை மையத்துக்கு அனுப்பப்பட்ட பெண் தற்கொலை - போலீசார் விசாரணை   

ராமநாதபுரம் அருகே காவல்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள ஆலோசனை மையத்திற்கு அனுப்பப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கணேசபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. 29 வயதான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலம் ராமநாதபுரம், கொம்பூதியை சேர்ந்த விஜய் என்பவருடன், திருமணம் ஆகாதவர் எனக் கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில், ஐஸ்வர்யாவை, விஜய் பார்க்க சென்றபோது, ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யாவை விஜய்  ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது கணவருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செயல்படும் பெண்கள் ஆலோசனை மையத்தில் தங்கும்படி போலீசார்  அனுப்பியுள்ளனர். அங்கு சென்ற ஐஸ்வர்யா கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.