ரயில் பயணிகளிடம் பறிமுதல் செய்யபட்ட கஞ்சா...! ஒரே நாளில் இவ்வளவா...?

ரயில் பயணிகளிடம் பறிமுதல் செய்யபட்ட கஞ்சா...! ஒரே நாளில் இவ்வளவா...?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணிகளை ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது முஜீப் என்பவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரிடம் தொடர் விசாரணை நடைபெற்ற சூழ்நிலையில், இன்று மதியம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்த பினாங்கினி விரைவு ரயிலில் குற்றப்பிரிவு ஆய்வாளர் வடிவுக்கரசி தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருக பாண்டி என்பவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 
காலையில் எட்டு கிலோ கஞ்சாவை பிடித்து விசாரணை முடிவதற்குள், மீண்டும் 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  

இன்று மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மொத்தமாக  15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் இரண்டு நபர்களையும் நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிக்க : பாரம்பரிய வாழை ரகங்கள் குறித்த கண்காட்சி...!