சென்னை விமானநிலையத்தில்... கால் கட்டுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்...!!!

சென்னை விமானநிலையத்தில்... கால் கட்டுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்...!!!

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடியே 18 லட்சம் மதிப்புடைய 4 கிலோ 167 கிராம் தங்கம், 17 லட்சத்தி  50 ஆயிரம் மதிப்புள்ள 20 ஐஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரகசிய தகவல்:

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த  2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாதித்தனர்.  2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். 

சோதனை:

அதில் விலையுர்ந்த  20  ஐ போன்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை  கண்டுபிடித்தனர்.  பின்னர் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.  அப்போது இருவரும் அணிந்து இருந்த ஷூ சாக்ஸ்களில் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர்.  இருவரின் ஷூ சாக்ஸுகளில்  இருந்து 1 கிலோ 965 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 

கால் கட்டுக்குள் தங்கம்:

இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர்.  அவர் முழங்காலில் பெரிய பேண்ட்டைட் கட்டுப்போடப்ட்டு இருந்தார்.  அது பற்றி  அதிகாரிகள் கேட்ட போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.  எனவே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போட்டு வலியுடன் நடந்து வருவதாக கூறினார்.  

ஆனால் அதற்கான மருத்துவ சான்றிதழ் எதுவும் அந்தப் பயணியிடம் இல்லை.  எனவே சுங்கத்துறை அதிகாரிகள் அவர் முழங்காலில் போடப்பட்டிருந்த பேண்டைட் கட்டை பிரித்துப் பார்த்தனர்.  அவருக்கு காலில் காயம் எதுவும் இல்லை.  ஆனால் கட்டுக்குள் ஒரு பிளாஸ்டிக் பவுச் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  அந்த பவுச்சுக்குள் 1 கிலோ 228 கிராம் தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். 

கழிவறைக்குள்:

மேலும்  சென்னை பன்னாட்டு விமான நிலைய  வருகை பகுதியில் உள்ள கழிவறையை விமான நிலைய ஊழியர்கள் சுத்தப்படுத்தும் போது அதன் தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் ஒன்று இருந்தது.  விமான நிலைய ஊழியர்கள் கண்டுபிடித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.  சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பார்சலை எடுத்துப் பிரித்துப் பார்த்த போது அதனுள் 974 கிராம் தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். 

அடுத்தடுத்து:

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடத்திய சோதனைகயில் 3  பயணிகளிடம் இருந்து விமான நிலைய கழிவறையில் இருந்தும் ரூ.2 கோடியே 18 லட்சம்  மதிப்புடைய 4 கிலோ 167 கிராம் தங்கமும் ரூ.17 லட்சத்தி  50 ஆயிரம் மதிப்புள்ள 20 ஐ ஃபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.  இது தொடர்பாக 3 பேரை கைது செய்து இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:   ஐஸ்வர்யா வீட்டில் நகை கொள்ளை... நிபந்தனை ஜாமீன்!!!