கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை... போக்சோவின் தொடரும் கொடூரங்கள்...

வேலைக்காக அழைத்து வந்து சிறுமிகளை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த பன்னை ஓன்னர் மற்றும் அவர் மனைவி உட்பட 15 பேர் போக்சோ கீழ் கைதாகியுள்ளனர்.

கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை... போக்சோவின் தொடரும் கொடூரங்கள்...

புதுச்சேரி | புதுச்சேரியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தனது வாத்து பன்னைக்கு வாத்து மேய்ப்பதற்காக சிவகங்கை மாவட்டதில் இருந்து சிறுமிகள் சிலரை அழைத்து வந்துள்ளார்.

அவர்களை பன்னையில் உள்ள அறையில் அடைத்து வைத்து கன்னியப்பன் உட்பட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மது போதையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமிகள் குழந்தைகள் நல வாரியம் தெரிவித்திருந்தனர்.

மேலும் படிக்க | கொலை வழக்கில் அண்ணன் - தம்பிக்கு ஆயுள் தண்டனை...

இதனையடுத்து இந்த வழக்கில் கன்னியப்பன் உட்பட 15 பேரை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில் இந்த வழக்கில் 9 பேர் ஜாமினில் வெளியே வந்தனர். மற்ற 6 பேர் சிறையில் இருந்த நிலையில் இந்த வழக்கானது கடந்த 2 வருடங்களாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் வாத்து பன்னை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மனைவி சுபா, மகன் ராஜ்குமார், சரத்குமார், சிவா, மூர்த்தி காத்தவராயன், ஆறுமுகம் உள்ளிட்ட குற்றம் சாடப்பட்ட 9 பேருக்கு தண்டனை விதிப்பதாகவும் மீதம் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி செல்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தண்டனை குறித்த விவரங்கள் இன்று மாலை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மேலும் ஒரு போக்சோ... வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை...

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வாத்து பன்னை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜகுமார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஒருவருக்கு 7 லட்சமும் மற்ற 4 சிறுமிகளுக்கு 5 லடசமும் இழப்பிடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது...