மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை நாடகம் நடத்தி தலைமறைவாகிய கணவன் கைது…  

திருப்பத்தூர் அருகே காதல் மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து  பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவன் கள்ளகாதலியுடன் பிடிபட்டார்.

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை நாடகம் நடத்தி தலைமறைவாகிய கணவன் கைது…   

திருப்பத்தூர் அடுத்த புது பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி இவர் எலவம்பட்டி பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய இருசிறுநீரகம் செயலிழதந்தால் தாவும் தனது மனைவியும் தற்கொலை செய்துகொள்வதாக கூறி மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து எரித்து கொன்று விட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் தலைமறைவான சத்திய மூர்த்தியை தேடி வந்த நிலையில், தஞ்சாவூரில் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திவந்தவரை செல்போன் சிக்னலை வைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த  திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் என்பவருடைய மகள் அர்ச்சனாவை ஆசை வார்த்தைகூறி சத்தியமூர்த்தி கள்ளக்காதலில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது. பின்பு கள்ளக்காதலியுடன் உல்லாசமாக வாழ ஆசைப்பட்ட சத்தியமூர்த்தி மனைவியை கட்டாயபடுத்தி தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது தெரிய வந்தது. பின்னர் தற்கொலை நாடகம் நடத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி குழந்தையுடன் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.