சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை...! கைது செய்த போலீசார்...!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை...! கைது செய்த போலீசார்...!

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கஞ்சா   போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் தடை செய்யப்பட்ட கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு மாதத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை, போதை பொருள் என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.