"எனக்கு என் வண்டி வேணும்!" :  டவர் மீது ஏறி போதை ஆசாமி அட்டகாசம்!

"எனக்கு என் வண்டி வேணும்!" :  டவர் மீது ஏறி போதை ஆசாமி அட்டகாசம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் செல்போன் டவர் மீது ஏறி குடிபோதை ஆசாமி அட்டகாசம் செய்துள்ளார்.

திருவண்ணாமலை அருகே உள்ள தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ராஜசேகர்(30) செய்யாறு ஆரணி சாலையில் உள்ள வடுகபட்டு கிராமத்தில் ஹோட்டல் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். 

இவர் செய்யாறு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது போலீசார் அவரை மடக்கி சோதனை செய்ததில் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியுள்ளார் என்பதை காவலர்கள் அறிந்துள்ளனர். இதன் காரணமாக அவர் மீது குடி போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவர் உடலில் காயங்கள் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவரிடம், உடலில் உள்ள காயங்களுக்கு சிகிச்சை பெறும் போது வாக்குவாதம் செய்துள்ளார். பின்னரே மருத்துவமனையில் இருந்து, நடந்து சென்று தனியார் கடையின் மீதுள்ள செல்போன் டவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளார் ராஜசேகர்.

 இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்போன் டவர் மீது ஏறிய ராஜ சேகரிடம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது, ராஜா சேகர் தனது இரு சக்கர வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ராஜசேகரிடம் லாளர்கள், அவரது வாகனத்தை திருப்பி தருவதாக கோரியும், அவர் கீழே இறங்காததால், ஒரு புறம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபடியே, மற்றொரு புறம் தீயணைப்பு துறையினர் 3 பேர் பின்புறமாக கயிறு கட்டி மேலே எறியுள்ளனர். 

பின்னர் அவரை மீட்டு கயிறு கட்டி கீழே இறக்கியுள்ளனர். பின்னர் செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அவரை மீட்டு செய்யாறு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் செய்யாறு ஆற்காடு சாலையில் ஒரு மணி நேரம் பொதுமக்கள் திரளாக கூடி செல்போன் டவர் மீது ஏறி நபரை வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: திருச்சியில் சேவல் கண்காட்சி: தங்க செயின், பணம் பரிசு!