ஏடிஎம் கார்டை மாற்றி  நூதன திருட்டு : பணத்தை திருடிய வாலிபர் கைது!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி  பணத்தை திருட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஏடிஎம் கார்டை மாற்றி  நூதன திருட்டு : பணத்தை திருடிய வாலிபர் கைது!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமுளை  கிராமத்தைச் சேர்ந்தவர்  நர்மதா. இவர் பணம் எடுப்பதற்காக திட்டக்குடியில்  ஏடிஎம் மையத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் தனது  ஏடிஎம்   கார்டைக் கொடுத்து  பணம் எடுத்து தரும்படி கூறியுள்ளார். அந்த நபரிடம்  ரகசிய எண்ணையும் கூறியுள்ளார். அதை பெற்றுக் கொண்ட அந்த வாலிபர் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல் பாவனை செய்து பணம் வரவில்லை என்று வேறொரு  ஏ.டி.எம். கார்டை நர்மதாவின் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

நர்மதா வீட்டிற்கு சென்ற பின் அவரது செல்போனிற்கு  தனது வங்கி கணக்கில் இருந்து 13 ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நர்மதா, உடனே இதுகுறித்து  திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் ஊதா நிறத்தில்  சட்டை அணிந்த நபர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பது தெரியவந்தது  இதனையடுத்து திட்டக்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே  சந்தேகப்படும்படி  வந்த நபரை மடக்கி விசாரணை செய்ததில், அந்த நபர்  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராஜ் என்பதும், ஏடிஎம்மில் பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்த நபர் எனவும்  தெரிய வந்தது இதனை அடுத்து  அவரை போலீசார் கைது செய்தனர்.