போதையில் ஆண்களுடன் இருந்த இளம்பெண்... தட்டிக்கேட்ட காவலாளியின் மண்டை உடைந்தது...

ஆவடியில் குடிபோதையில் இருந்த 4 பேர் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியின் மண்டையை இரும்பு பைப்பால் அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் ஆண்களுடன் இருந்த இளம்பெண்... தட்டிக்கேட்ட காவலாளியின் மண்டை உடைந்தது...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஸ்ரீதேவி நகர் பகுதியை சேர்ந்தவர் புருசோத்தமன். இவர் சேக்காடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் பணியில் இருந்த போது, அதே குடியிருப்பில் வசித்து வரும் ஒரு இளம்பெண் உட்பட 4 பேர் மதுபாதையில் வளாகத்திற்குள் வந்ததாக கூறப்படுகிறது.
 
இதனை பார்த்த புருசோத்தமன் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் புருசோத்தமனை இரும்பு பைப்பால் அடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.