மயானத்துக்குச் செல்லும் வழியில் இரும்பு வேலி - தகர்த்து எறிந்ததால் பதற்றம்

தர்மபுரி அருகே மயானத்துக்கு செல்லும் வழியில் கம்பி வேலி அமைத்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

மயானத்துக்குச் செல்லும் வழியில் இரும்பு வேலி - தகர்த்து எறிந்ததால் பதற்றம்

தர்மபுரி அருகே மயானத்துக்கு செல்லும் வழியில் கம்பி வேலி அமைத்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பாக்கவுண்டர் தோட்டம் கிராமத்தை சேர்ந்த காவேரி கவுண்டர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இறந்தவரின் சடலத்தை அவரது குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் புதைக்க கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிலர் புதிதாக கம்பி வேலி அமைத்து வைத்திருந்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து கம்பி வேலியை ஒரு தரப்பினர் தகர்த்ததால் மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு முன்கூட்டியே பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார், இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் சடலம் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.