வரதட்சணை கொடுமையா? திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 40 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமையா? திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 40 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை முத்துமாரி அம்மன் காலனியைச் சேர்ந்த பவானீஸ்வரி அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 3 ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி திருவேற்காடு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அதே தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து 15 நாட்களாக வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திக்கும், பவானீஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதனால் ஆத்திமடைந்த பவானீஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று கார்த்திக் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென கூறி சமாதானம் செய்ய சென்றுள்ளார். அப்போதும் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பவானீஸ்வரி அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக இளம்பெண் பவானீஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்து கணவரான கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.