"ஜெயிலர்" பட வில்லன் விநாயகன் கைது!

கேரளாவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக ஜெயிலர் திரைப்பட வில்லன் நடிகா் விநாயகனை போலீசாா் கைது செய்தனா்.

ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டின் விருப்பமான வில்லனாக உருவெடுத்துள்ளவர் பிரபல மலையாள நடிகர் விநாயகன். தனித்துவமான நடிகர், பாடகர், நடனக் கலைஞர் என கவனமீர்த்து தனக்கென தன் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விநாயகன், ஜெய்லரில் வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்த்துள்ளார்.

அடுத்த மாதம் ரிலீசாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் காவல் நிலையத்துக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் மது போதையில் விநாயகன் தொந்தரவு கொடுத்ததாகவும் இதனை அடுத்து கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.