காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து... ஒருவர் பலி...

கோவை, உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து... ஒருவர் பலி...

கோவை உக்கடத்தில் அதிகாலையில் சென்ற  காரில், சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் காரிலிருந்த நபர் உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | பணி நிரந்தரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீமான்!தமிழக அரசிடம் வலியுறுத்தியது என்ன?

முதற்கட்ட விசாரணையில், விபத்தில் தீக்கிரையான கார் பொள்ளாச்சி பதிவெண் கொண்டது என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட முகவரி குறித்து விசாரித்து வருவதாகவும், உயிரிழந்தவர் யார் என்பது பற்றியும் தகவல் சேகரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர் 

சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | விமான நிலைய காம்பவுண்டில் மோதி உள்ளே புகுந்த லாரி...!

தொடர்ந்து கார் வெடித்த இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காரில் இருந்த 2 சிலிண்டர்களில் ஒன்று வெடித்துள்ளதாகவும்,  சம்பவம் குறித்து விசாரிக்க  6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

மேலும் படிக்க | விபத்தில் சிக்கிய புள்ளி மான்...!