கலாசேத்ரா புகார்... பழிவாங்கும் நோக்கமே...!!!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கலாசேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கலாசேத்ரா மையத்தில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில் முன்னாள் மாணவி போலி புகார் அளித்ததில் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு இருப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார் ஹரிபத்மனின் மனைவி. இவ்வாறு ஹரி பத்மன் மீது புகார் அளித்த முன்னாள் மாணவி மற்றும் கலாசேத்ராவில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
மூத்த பெண் காவல் அதிகாரிகளை கொண்டு உரிய முறையில் தனது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும்
தன் கணவருடன் வேலை பார்க்கும் நிர்மலா நாகராஜன் நந்தினி நாகராஜன் ஆகிய இரண்டு பேராசிரியர்கள் தூண்டுதல் பெயரில் மீரா கிருஷ்ணன் என்ற முன்னாள் மாணவி புகார் அளித்துள்ளாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் நான்கு ஆண்டுகள் கலாசேத்ராவில் நடனம் கற்றுக் கொண்டதாகவும் அதன் பின்பு கனடா சென்று விட்டதாகவும் கலாசேத்ரா நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது தனது கணவர் கடுமையாக நடந்து கொண்டதை கருத்தில் கொண்டு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஊடகங்கள் மேற்கொண்ட பணி பாராட்டப்பட வேண்டியது....!!!