பல பெண்களுக்கு காதல் வலைவீசி பணம் பறித்த கில்லாடி வாலிபர்..! ஏமாந்த பெண்கள் ஃபயாஸை விட்டு விடும் படி அடம்..!

சோஷியல் மீடியாவில் பல பெண்களுக்கு காதல் வலைவீசி லட்சக்கணக்கில் பணம் பறித்த கில்லாடி வாலிபரை, விட்டு விடும் படி இளம்பெண்கள் அடம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல பெண்களுக்கு காதல் வலைவீசி பணம் பறித்த கில்லாடி வாலிபர்..! ஏமாந்த பெண்கள் ஃபயாஸை விட்டு விடும் படி அடம்..!

சமூக வலைதளங்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தைக்கூறியும், ஆபாசமாக பேசி அதன் ஆடியோவை காட்டி மிரட்டியும் லட்சக்கணக்கில் ஒருவர் பணம் பறித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், பயாஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

விசரணையில் பயாஸ், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்களுடன் சமூக வலைதளங்களில் நண்பராக பழகியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும் பணம் பறித்துள்ளார். குறிப்பாக செல்போன் மற்றும் மெடிக்கல் கடை நடத்தி வருகிறேன். அதற்கு பணம் தேவைப்படுகிறது எனக் கூறி பணம் பறித்துள்ளார்.

மேலும் ஒரு சில பெண்களிடம் ஆபாசமாக பேசும் ஆடியோவை பதிவு செய்து அதனைக்காட்டி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அந்த பணத்தில் நல்ல ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இப்படி தொடர்ந்து விசாரணை நடந்துக்கொண்டிருந்தபோது, குற்றவாளியான பயாசிடம் இரவு நேரங்களில் பேசக்கூடிய இளம்பெண்கள் சிலர் அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். அதுமட்டுமில்லாமல் ஒரு சில பெண்கள் மெசேஜ் அனுப்பியும் வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் இளம் பெண்களிடம் பயாசுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர் ஒரு மோசடி நபர். அவரை நம்பி ஏமாற வேண்டாம். இனிமேல் இந்த எண்ணுக்கு போன் செய்யாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளனர். இருப்பினும், அதனை நம்பாத சில பெண்கள் பயாஸ் மிகவும் நல்லவர். அவர் எங்களுக்கு வேண்டும் என கூறியுள்ளனர். அதிலும் இளம் பெண் ஒருவர் பயாஸ் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் எனவும், மேலும் சில பெண்கள் பயாசைவிட்டு விடும்படியும் கெஞ்சியுள்ளனர் .

போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும், கேட்காத இளம்பெண்கள், பயாசிக்கு ஆதரவாக பேசி அடம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.