போலி அடையாளங்களை உருவாக்கி மோசடி... கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் அபகரிப்பு...

ஆள்மாறாட்டம் செய்து பல பேரின் நிலங்களை அபகரித்து வந்த இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

போலி அடையாளங்களை உருவாக்கி மோசடி... கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் அபகரிப்பு...

சென்னை புறநகர் அம்பத்தூர் புத்தகரத்தை சேர்ந்த வெங்டேசன் என்பவர் தனக்கு சொந்தமான 1800 சதுர அடி கொண்ட இடத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் புத்தகரம் பகுதியை சேர்ந்த ஹரிகோபால் என்பவர் போலி ஆவணங்கள் மற்றும் போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, அயனாவரத்தை சேர்ந்த முரளி என்பவரை உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து பல நிலங்களை அபகரித்தது தெரியவந்தது.

குறிப்பாக அம்பத்தூர் புத்தகரத்தில் வெங்கடேசனுக்கு சொந்தமான 1800 சதுர அடி கொண்டநிலம், அம்பத்தூர் ஸ்ரீ லக்ஷ்மி அம்மன் நகரை சேர்ந்த புனிதவதி என்பவருக்கு சொந்தமான 2400 சதுர அடி கொண்ட நிலம், அம்பத்தூர் புத்தகரம் கிராமம் வெற்றி நகர் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான 1800 சதுர அடி கொண்ட நிலம் என 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை அபகரித்தது தெரியவந்தது.

இதையடுத்து தொடர்ந்து நில அபகரிப்பில் ஈடுபட்டுவந்த ஹரி கோபால் மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட முரளி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.