கொலை வழக்கில்  அண்ணன் - தம்பிக்கு  ஆயுள் தண்டனை...

கொலை வழக்கில்  அண்ணன் - தம்பிக்கு  ஆயுள் தண்டனை...

திண்டுக்கல் | முத்தழகுப்பட்டி சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் ராஜ்குமார் (32). லோடுமேன்.  கடந்த 2017 ஜூன் மாதம் சொத்து தகராறில் ராஜ்குமார் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தழகுபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் தாமஸ் செல்வம்(40), சுரேஷ் அந்தோணி(36) மற்றும் அஜித் பாண்டி (35), சார்லஸ் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் படிக்க | பைக் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு...

இந்த வழக்கு  கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சரவணன் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சூசை ராபர்ட்  வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் சகோதரர்கள் தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  

கொலை வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | மேலும் ஒரு போக்சோ... வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை...