மது போதையில் கோவில் பூசாரியின் கையை உடைத்த நபர் கைது!!!
சென்னை வியாசர்பாடி பி.வி காலனி 1வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி. இவருக்கு வயது 65. இவர் பி வி காலனி பகுதியில் உள்ள பீலிகான் முனீஸ்வரர் ஆலயத்தில் கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம், இரவு ஏழு மணி அளவில், கோவில் வாசலில் ஒருவர் குடிபோதையில் படுத்து இருந்தார்.
மேலும் படிக்க | காணாமல் முருகன் வள்ளி தேவானை சிலை மீட்பு!
அவரை தண்ணீரை தெளித்து எழுப்பிய போது அந்த நபர் கோபம் அடைந்து, அருகில் இருந்த உருட்டு கட்டயை எடுத்து அடித்ததில் பூசாரியின் இடது கை உடைந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உள்நோயாளி அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க | ஒற்றைத் தலைமை : ரத்தம் சொட்ட சொட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நிர்வாகி...
மாயாண்டி இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் வியாசர்பாடி பி.வி காலனி 26 வது தெருவை சேர்ந்த, 28 வயதான விமல் என்ற நபர் குடிபோதையில் கோவிலில் படுத்து இருந்ததும், தூக்கத்தில் அவரை எழுப்பிய போது அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து அடித்ததும் தெரிய வந்தது.
மேலும் படிக்க | நள்ளிரவில் செல்போனில் நீண்ட நேரம் பேசிய மனைவி; ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவர் !
இதனையடுத்து நேற்று மாலை விமலை கைது செய்த எம்கேபி நகர் போலீசார் விமல் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.