மதிமயங்க செய்யும் மதுபோதை... வாலிபர் கொலையால் அரக்கோணம் அருகே பரபரப்பு...

அரக்கோணம் அருகே மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிப்படுகொலை.

மதிமயங்க செய்யும் மதுபோதை... வாலிபர் கொலையால் அரக்கோணம் அருகே பரபரப்பு...
அரக்கோணம் அருகே மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் காலணியை சேர்ந்தவர் கௌதம். சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
 
அப்போது அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கடுமையாக தாக்கப்பட்ட கெளதம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மது போதையில் கொலை நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.