வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை- மூன்று தினங்களில் அடுத்தடுத்து மூன்று கொலைகள்- பொதுமக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வாலிபர் சரமாரியாக வெட்டி கொலையில் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை- மூன்று தினங்களில் அடுத்தடுத்து மூன்று கொலைகள்- பொதுமக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் வயது 27. இதற்கிடையில் இவர் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சர்ச் அருகில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் அப்துல் காதரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமாரும் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கண்டனர். மேலும் முன் தகராறு காரணமாக அப்துல்காதர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.   இதற்கிடையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களில் அடுத்தடுத்து 3 கொலை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது மேலச்செவலை சேர்ந்த சங்கர சுப்ரமணியம் என்பவர் கடந்த நேற்று முன்தினம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிராஞ்சேரியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் நேற்று நள்ளிரவு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

சங்கர சுப்ரமணியம் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் தான் மாரியப்பன் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது பாளையங்கோட்டையில் மற்றொரு வாலிபர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.