ஆடியோ, வீடியோ வெளியிட்டு மைக் செட் உரிமையாளர் தற்கொலை: நீண்ட தேடுதலுக்கு பிறகு ஏரியில் உடல் மீட்பு...

கொடைக்கானலில் ஆடியோ மற்றும் வீடியோ வெளியிட்டு மைக் செட் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆடியோ, வீடியோ வெளியிட்டு மைக் செட் உரிமையாளர் தற்கொலை:  நீண்ட தேடுதலுக்கு பிறகு ஏரியில்  உடல் மீட்பு...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஜெயசந்திரன் தனது  செல்போனில் ஆடியோ மற்றும் வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த ஆடியோ மற்றும் வீடியோ கொடைக்கானல் முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து போலீசார் அந்த பகுதி முழுவதும் ஜெயசந்திரனை தீவிரமாக தேடினர். நீண்ட தேடுதலுக்கு பிறகு கொடைக்கானல் ஏரியில்  ஜெயசந்திரன் சடலமாக மீட்கப்பட்டார்.  பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.