வாகன சோதனையில் சிக்கிய நடமாடும் லாட்டரி விற்பனையாளர்! நல்ல நேரத்தை எடுத்து சென்ற போது கைது !!  

சங்கராபுரம் அருகே சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் வாகன சோதனையில் கைது செய்தனர்.  

வாகன சோதனையில் சிக்கிய நடமாடும் லாட்டரி விற்பனையாளர்! நல்ல நேரத்தை எடுத்து சென்ற போது கைது !!   

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போழுது சங்கராபுரம் - மோட்டாம்பட்டி சாலையில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

 இதில் வடபொன்பரப்பி கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை என்பதும் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரியை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஏழுமலையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நல்ல நேரம் ,தங்கம் மற்றும் குமரன் ஆகிய பெயர்களை கொண்ட 30 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.