தபால் நிலையத்தில் பணம், ஆவணங்கள் திருட்டு!!

தபால் நிலையத்தில் பணம், ஆவணங்கள் திருட்டு!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தபால் நிலையக் கதவின் பூட்டை உடைத்து பணம்  மற்றும் ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளயடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேலூர் கிராமத்தில் ஒரு தபால் நிலையம் இயங்கி வருகிறது. வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு தபால் நிலையத்தை ஊழியர் ஜெயப்பிரியா மூடி சென்றுள்ளார்.

மறுநாள் காலையில், தபால் நிலையம் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஜெயப்பிரியாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜெயப்பிரியா அங்கு வந்து பார்த்தபொழுது தபால் நிலையத்தின் பூட்டுகள் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 55 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

மேலும் அருகே இருந்த தனியார் பால் கொள்முதல் நிலையத்தின் பூட்டை உடைத்து திருடன் முயற்சித்த போது உள்ளே பணம் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டு சென்று உள்ளனர். அப்பகுதி காவல் துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து மதுராந்தகம் சுற்றுவட்டார கிராமங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்

இதையும் படிக்க: நீலகிரியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு!