தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை: கருத்துவேறு காரணமா?

சென்னை பாடி அருகே தாய் மற்றும் மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை: கருத்துவேறு காரணமா?

சென்னை பாடி அருகே தாய் மற்றும் மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவை சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி வயது 40 இவரது மனைவி ராஜலட்சுமி வயது 38 இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.  அசோக் என்பவர் பாடி பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதிய உணவிற்கு அசோக் வீட்டுக்கு சென்ற போது மனைவி மற்றும் மகள் இருவரும் மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தவுடன் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தாய் மற்றும் மகள் இருவரின் உடல்களையும் எடுத்துச் சென்றனர்.  அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை தொடர்பாக ஜே ஜே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் தாய் மற்றும் மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.