பல்நோக்கு செவிலியர் உதவியாளர் வீட்டில் திருட்டு.. 68 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை!!

திருவண்ணாமலையில் பல்நோக்கு செவிலியர் வீட்டின் பூட்டை உடைத்து 68 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்நோக்கு செவிலியர் உதவியாளர் வீட்டில் திருட்டு.. 68 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை!!

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் பல்நோக்கு செவிலியராக பணியாற்றும் சுமதி என்பவர் வசித்து வருகிறார். வழக்கம்போல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு பணிக்காக சுமதி சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேஷ் தனியறையில் இருந்துள்ளார். இந்த நிலையில்  வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 68 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பணி முடித்து வீடு திரும்பிய சுமதி இது குறித்த தகவலை அறிந்து அதிர்ச்சி  அடைந்தார். இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்கு  பதிவு செய்து  தடயங்களை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.