தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட கொலை குற்றவாளி...!

தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட கொலை குற்றவாளி...!

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய் என்பவர், கொலை வழக்கில் ஒன்றில் கைதாகி அண்மையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் சஞ்சய் ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறிய நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனிடையே, நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபோது சஞ்சய் துக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 

இதையும் படிக்க : தெலுங்கானாவில் பெருக்கெடுத்த வெள்ளம்...டிராக்டர் மூலம் மக்களை மீட்ட போலீசார்!

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதன்படி, முதற்கட்ட விசாரணையில், கொலை வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.