ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த கொலை சம்பவங்கள்....கையை துண்டித்து சாலையோரம் வீசி சென்ற கொடூரம்....

மதுரையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த கொலை சம்பவங்க பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இருவேறு இடங்களில் நடந்த கொலை சம்பவங்கள்....கையை துண்டித்து சாலையோரம் வீசி சென்ற கொடூரம்....

மதுரை அருகே கே.புதூர் ஐ.டி.ஐ எதிரே உணவகம் வைத்து நடத்தி வருபவர் முத்துக்குமார்.  மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த இவர், கடந்த 6 மாதமாக மனைவியை  பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று உணவகத்தில் இருந்த முத்துக்குமாரை,  மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதுடன் அவரது கையை வெட்டி எடுத்து, எதிரே உள்ள ஐடிஐ வளாக சுவர் அருகே வீசி விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை நிகழ்ந்துள்ளதா ? அல்லது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக கொலை நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


அதேபோன்று மதுரை அடுத்த எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தெருவில் வசித்து வருபவர், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான சிவகுமார். இவருக்கும், மேரிக்குட்டி என்பவருக்கும் திருமணமாகி கடந்த 35 வருடங்களாக குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் தம்பதியினர் இருவரும் தனிதனியே வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்த கணவர் சிவகுமார், மனைவி மேரி குட்டியின்  கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,, சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த இரு கொலை சம்பவங்களும் மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.