இறால் பண்ணையில் மர்மமான முறையில் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு: விபத்தா அல்லது கொலையா?

ஆந்திர மாநிலம் குண்டூரில், இறால் பண்ணையில் மர்மமான முறையில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இறால் பண்ணையில் மர்மமான முறையில் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு: விபத்தா அல்லது கொலையா?

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள லங்கவாணிதிப்ப கிராமத்தில் தனியார் இறால் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 6 பேரும், இன்று காலை உடல் கருகி சடலமாக கிடந்தனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேரும் இறந்திருக்கலாம் எனவும், இறால்களுக்கான ரசாயன உணவுப் பொருட்கள் அவர்கள் தங்கிருந்த அறையில் வைத்திருந்ததால், அதில் தீப்பிடித்து இறந்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.